Sunday, January 24, 2010

பௌத்த விகாரையிலிருந்து ஆயுதங்கள் மீட்பு.

தெமட்டக்கொட பிரதேசத்தில் உள்ள பிரபல பொத்த விகாரை ஒன்றினுள் இருந்து இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள் , 56 கிரனேட்டுக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்கள் பல நேற்று பிற்பகல் 7 மணியளவில் வீசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விசேட அதிரடிப் படையின் தளபதி டிஐஜி சரத் சந்திர அவர்களை தொடர்பு கொண்டு கேட்போது, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை தீவிரமாக ஆதரிக்கும் பிக்கு ஒருவரின் உதவியுடன் இவ்வாயுதங்கள் குறிப்பிட்ட விகாரையில் வைக்கப்பட்டுள்ளதாக தனக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு மேற்கொண்ட தேடுதல்களின் போது மேற்படி ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாயுதங்களைக் கொண்டு தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துவிட்டு அரசாங்கத்தின் மீது பழியைச் சுமத்துவதற்கு எதிர்கட்சியினரால் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக குறிப்பிட்ட விகாரையின் இரு பிக்குகள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள பிக்குகளில் ஒருவர் பிக்குகள் முன்னணியின் தலைவர் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment