Thursday, January 14, 2010

தமிழ் சிறைக் கைதிகள் உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வைவிட்டனர்.

இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில், தம்மீதான வழக்குகள் விசாரணை செய்யப்படவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் எனக்கோரி நூற்றுக்கணக்கான கைதிகள் உண்ணாவிரதமிருந்து வந்தனர்.

சற்று முன்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலைக்குச் சென்ற மன்னார் ஆயர் ராப்பு ஜோசப் , அரசாகங்கம் எதிர்வரும் 2 மாதங்களுள் இறுதி முடிவுகள் தீர்மானிக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்ததையடுத்து கைதிகள் தற்காலிகமாக தமது உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment