Thursday, January 21, 2010

கப்பம் கொடுத்தல் வாங்குதல் ஆவனங்கள் நீதிமன்றில்.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலின் ஆதரவினை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் மத்தியஸ்தத்துடன் மயோன் முஸ்தபாவினால் அவருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆவனங்களை இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கல்கிஸை நீதிமன்றில் சமர்பித்துள்ளனர்.

குறிப்பிட்ட முயற்சியானது தேர்தல் சட்டதிட்டங்களின் பிரகாரம் கிறிமினல் குற்றம் என சிஐடி யினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பூரண விசாரணை ஒன்றை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று சீஐடி யினரை கேட்டுள்ளது.

இக்குறிப்பிட்ட லஞ்ச நாடகம் தொடர்பாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சார்பாக முஸம்மிலுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment