Saturday, January 2, 2010

நாமல் திருமலை விஜயம் : பிரசார நடைபவனியிலும் ஈடுபட்டார்.

இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார். திருகோணமலை, கண்டி வீதியில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திருகோணமலை மவாட்ட பிரதான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ உரையாற்றினார்.

திருகோணமலைக்கு வருகை தந்த ஜனாதிபதியின் புதல்வர் கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலும் உரையாற்றி இருந்தார்.

திருகோணமலை நகரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தை அடுத்து சுசந்த புஞ்சி நிலமே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதி மற்றும், கிழக்கு மாகாண அமைச்சர் துரையப்பா நவரெட்னராஜா ஆகியோர் சகிதம் பெருந்திரளான சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமிய இனத்தவர்கள் உடன் கண்டி வீதியில் இருந்து பிரதான வீதி, கடற்காட்சி வீதி, மத்திய வீதி, ஊடாக மாபெரும் பிரசார நடைபவனியை மேற்கொண்டு திருகோணமலை மணிக்கூட்டு சந்திக்கு வருகை தந்தார்.

பின்னர் பொதுச் சந்தை, மத்திய பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றிற்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு திரட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com