Wednesday, January 6, 2010

த.தே.கூ ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு.- சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு பேசுகையில், தாம் இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நாடாத்தியதாகவும், ஜெனரல் பொன்சேகா மஹித்த ராஜபக்சவிலும் பார்க்க சிறுபாண்மையினரின் அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக அதிகம் உணர்ந்துள்ளதாக கருதுவதால் அவருக்கு தேர்தலில் தமது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியதுடன் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதற்காக எவ்வித ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை என விசேடமாக தெரிவித்துள்ளார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் வெளிநாடுகளில் உள்ள 3 உறுப்பினர்களை தவிர 18 பேரும் கூடி ஆராய்ந்ததாகவும் 18 பேரில் 8 பேர் நடுநிலைவகிக்க விரும்புவதாக தெரிவித்துள்ள நிலையில் பெரும்பாண்மையானவர்கள் ஜெனரலை ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment