Wednesday, January 13, 2010

தங்காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது.

தங்காலைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிறேமதாசவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ்வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் DIG நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்படி துப்பாக்கி பிரயோகத்தில் 58 வயதுடைய பெண்மணி ஒருவர் உயிரிழந்தும் 10 பேர் காயமடைந்தும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment