Friday, January 1, 2010

ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதலுக்கு உள்ளானார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மாத்தளை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் திருமதி. சுஜாதா அளகக்கோன் காடையர் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளானதாக நவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த புதன் கிழமை (டிச 30) இரவு எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா விற்கான தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பங்குபற்றிவிட்டு திரும்பும் வழியில்தான் தாக்குதலுக்கு உள்ளானதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ள அவர் தன் மீது தாக்குதல் மேற்கொண்ட காடையர் குழுவை தான் இனம்கண்டு கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்:

நவுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராச்சி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருதாக கூறப்படுகின்றது.


No comments:

Post a Comment