Saturday, January 2, 2010

யாழ் - கண்டி பஸ் சேவை ஆரம்பம்.

ஏ9 பாதையூடாக யாழ்-கண்டி பஸ் சேவை மிகவிரைவில் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதி பொது முகாமையாளர் பனுகுலராச்சி, இச்சேவையினை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் இணைந்து நாடாத்தும் எனவும், இதற்கான வேண்டுகோள் தனியார் பஸ் சேவை நிறுவனங்கள் பலவற்றிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் திங்கட் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் தனியார் பஸ்சேவை பிரதிநிதிகளும் , இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளும் கலந்து கொள்வர் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment