Sunday, January 10, 2010

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற ஆசிவேண்டி நல்லூரில் வீசேட ஆராதனை.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக யாழ் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். அங்கு அவரது வெற்றிக்கு ஆசிவேண்டி விசேட பூசைகள் இடம்பெற்றன. முப்படைத் தளபதிகள் சகிதம் யாழ் சென்றுள்ள ஜனாதிபதி வட மாகாண கட்டளை மையம் அமைந்துள்ள பலாலி இராணுவ முகாமிற்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு படையினர் மத்தியிலும் உரையாற்றியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களில் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானாந்தாவும் கலந்து கொண்டுள்ளார். இப்பிரச்சாரங்களுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களின் ஒருவரான முரளிதரனும் கலந்து கொள்ளவிருந்தாக கூறப்பட்டிருந்தபோதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகின்றது.




No comments:

Post a Comment