Wednesday, January 6, 2010

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை அமைப்பாளர் ஜெனரலுக்கு ஆதரவு.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளியான மறைந்த காமினி திஸாநாயக்கவின் புதல்வரும் , சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான மயந்த திஸாநாயக்க எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சார மேடையில் தனது முடிவை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அங்கு பேசிய அவர் தான் சிறிலங்கா சுந்திரக்கட்சியின் உறிப்பினர்களுடன் புரிந்துணர்வுடன் செயல்படமுடியாமையினால் , சரத் பொன்சேகாவுடன் இணைய முடிவு செய்துள்ளதாகவும் , ஊழல்கள் ஒழித்து , சட்டத்திற்கு கட்டுப்படும் ஒழுக்கமுள்ள சமுதாயம் ஒன்றை உருவாக்கும் பொன்சேகாவின் முயற்சிக்கு உதவிபுரியவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment