Friday, January 1, 2010

மங்களவின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றார் சிவில் பாதுகாப்பு படை இயக்குனர்.

இலங்கை சிவில் பாதுகாப்புப் படை நலன்புரி நிதியத்தின் 1500 மில்லியன் ரூபாய்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக மங்கள சமரவீர குற்றஞ்சுமத்தியிருந்தார். இக்குற்றச்சாட்டு சிவில் பாதுகாப்பு படையின் இயக்குனர் றியர் அட்மிரல் சறத் வீரசேகராவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த றியர் அட்மிரல் சரத் வீரசேகாரா, நலன்புரி நிலையத்தின் கொடுக்கல்வாங்கல்கள் யாவும் புத்தகங்களில் பதியப்பட்டுள்ளாதாகவும் , அப்புத்தகங்களை அனைவரும் பார்வையிட முடியும் எனவும் , குற்றச்சாட்டப்பட்டுள்ளவாறு பணம் அவ்வாறனதோர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை நிரூபிக்கப்படுமானால் தான் உடனடியாக பதவி விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com