Wednesday, January 6, 2010

ஏ9 வீதி 24 மணிநேரமும் திறந்திருக்குமாம்.

தெற்கையும் யாழ் குடாநாட்டையும் இணைக்கின்ற கொழும்பு-கண்டி பிரதான வீதி (ஏ9 வீதி) நேரமும் இன்று நள்ளிரவிலிருந்து பொதுமக்களின் பாவனைக்காக 24 மணி நேரமும் திறந்து விடப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அத்துடன் இன்றிலிருந்து அப்பாதையினூடாக பயணிகள் பாதுகாப்புப்படையினரின் வழித்துணையின்றி பயணம் செய்யமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 18ம் திகதி யாழ் செல்லவுள்ள நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கில் காணப்படும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான சில முக்கிய மாற்றங்களை அறிவிப்பார் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com