Friday, January 8, 2010

புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 713 பேர் நாளை வவுனியாவில் விடுவிக்கப்படுகிறார்கள்

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் நாளை சனிக்கிழமை வவுனியாவில் விடுவிக்கப்படுகிறார்கள். செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து இவர்கள் விடுவிக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகம் தெரிவிக்கின்றது.

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெவித்தார்.

வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப் பட்டிருந்த இவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவர். ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். ஏனையவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர்.



No comments:

Post a Comment