Wednesday, January 6, 2010

60 புலிகளியக்கச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

புலிகளியக்கத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்து கடந்த சில ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 60 பேரை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் நீதி அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது. இத்தனை காலமும் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கபட்டிருந்தவர்களில் ஒரு தொகையே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றது.

இவ்வாறு இலங்கையில் உள்ள சகல சிறைச்சாலைகளிலுமாக 600 பேரளவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com