Sunday, January 3, 2010

டெல்லியில் தப்பிய தீவிரவாதிகள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு:

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக, பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்துல் ரசாக், முகமது சாதிக், ரபாகத் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டெல்லி திகார் ஜெயிலில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அவர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க டெல்லி உள்பட நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே 3 தீவிரவாதிகளை பற்றியும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். 3 பேரின் படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com