Sunday, January 31, 2010

சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பதவி ஏற்கின்றார். 5ம் திகதி பாரளுமன்றம் கலையும்.

இலங்கையின் 6 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச அவர்கள் எதிர்வரும் நான்காம் திகதி கண்டியில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று அஸ்கிரய பீடாதிபதிகைளச் சந்திக்க சென்றிருந்த ஜனாதிபதி இவ்விடத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தியதாக இச்சந்திப்பில் கலந்திருந்த அமைச்சர் ஹெகலிலய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதின் தற்போதைய பதிவிக்காலம் எதிர்வரும் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இருக்கின்றபோது, அவர் அக்காலம் முடியும் தறுவாயில் பதவி பிரமாணம் செய்துகொள்ள முடியுமா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றுடன் பரிசீலிக்கப்படும் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இவ் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து எதிர்வரும் 5ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரியவருகின்றது. அதிலிருந்து இருவாரங்களில் பாராளுமன்ற தேர்லுக்கான வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையாளர் கோருவார்.

இத்தேர்தலும் மிகவும் சிக்கலான தேர்தலாகவே அமையப்போகின்றது. அந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை நாடாத்திவிட்டு பதவி பிரமாணம் செய்யாது இருந்தால் , தேர்தல் முடிவுகளில் அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

பாராளுமன்றை கலைத்து விட்டு ஜனாதிபதி ரஸ்யா பயணமாகவுள்ளார். இலங்கை 300 மில்லியின் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் கடனாக கோரியுள்ளது. இக்கடனினை பெற்றுக்கொள்வதற்கான இறுதி ஆவனங்களில் கையொப்பம் இடும்பொருட்ட ஜனாதிபதியின் பயணம் அமைந்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment