Monday, January 18, 2010

300 மில்லியன் கப்பம் : கொடுத்தவர், வாங்கியவர் இருவரும் தனித்தனியே வழக்குத்தாக்கல்.

ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்சவினால் நிறுவப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணி எனும் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் அவர்களுக்கு , எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறு 300 மில்லியன் ரூபா கப்பம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணம் மயோன் முஸ்தபாவினால் வழங்கப்பட்டதாகவும் அவற்றை நிரூபிக்கும் வீடியோ பதிவுகளுகளும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஜெனரல் தரப்பு வக்கீல்கள் முசம்மில் தமது கட்சிக்காரருக்கு ஆதரவு வழங்குவதாக லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர். அதே நேரம் லஞ்சம் வாங்கிய பா.உ முசம்மில், மயோன் முஸ்தபா லஞ்சம் தனக்கு லஞ்சம் கொடுத்ததாக முiறிட்டுள்ளார்.

No comments:

Post a Comment