Wednesday, January 27, 2010

கிரனேட் தாக்குதலில் பிக்கு உட்பட இருவர் கொலை. (இணைப்பு 1)


கம்பொல, தம்பிலிகல பிரதேசத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ள கிரனேட் தாக்குதலில் பௌத்த பிக்கு ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

தம்பிலிகலவிலுள்ள சிறிபோதிராஜராமய விகாரையினுள் நுழைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சக்தி வாய்ந்த அமைச்சர் ஒருவரின் செயலாளர் தலைமையில் சென்ற காடையர் கும்பல் ஒன்று பௌத்த பிக்குவை சுட்டுக்கொலை செய்ததாகவும், அவர்கள் திரும்பிச் செல்லும் போது பன்சலை பிரதேசத்தில் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட கிரனேட் தாக்குதலில் அங்கு வந்திருந்த காடையர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்தாகவும் ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.

இச்செய்தியின் அடிப்படையில் பௌத்த பிக்குவுடன் கிரனேட்டுக்கள் சகிதம் ஆயுததாரிகள் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

இத்தாக்குதலை நாடாத்த வந்த குழுவினர் மொன்ராரோ, டபிள்கப் மற்றுமோர் வாகனம் என்பவற்றில் அதிபயங்கர ஆயுதங்களுடன் வெளிப்படையாகவந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், விகாரையிலிருந்த மேலுமோர் பிக்கு காயமடைந்துள்ளதுடன் அருகிலிருந்த வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com