Thursday, December 3, 2009

மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவின் நினைவு மண்டபத்திற்கு கல்வீச்சு.

சிலாபம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத்திட்ட விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பிரேமதாச மண்டபத்தின் திறப்பு விழா இடம்பெறவிருந்த சமயத்தில் நுழைந்து குழுவொன்று அங்கு செய்யப்பட்டிருந்த சோடனைகளை நாசமாக்கி கழற்றி எறிந்ததுடன் ஏற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளது.

இவ் மண்டப திறப்பு விழாவின்போது ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு தெரிவாகியிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் W. ஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் றங்க பண்டார முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸில் பா.உ றங்கபண்டார முறைப்பாடு செய்துள்ளார். இத்தாக்குல் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத்தலைவர் ஜகத் பெரேரா தலலைமையில் இடம்பெற்றுள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார். எது எவ்வாறாயினும் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரதேச சபைத்தலைவர், குறிப்பிட்ட நிகழ்வில் உடன்பாடு இல்லாத மக்களால் இச்சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்தாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com