Tuesday, December 15, 2009

புலம் பெயர் புலிப்பினாமிகள் மத்தியில் கலாசார சீரழிவு தலைவிரித்து ஆடுகின்றது. சனீஸ்வரன்

இன்று இலங்கையில் பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்ட பின் அவர்களது இறுக்கமான கட்டுப்பாடு அடக்கு முறையிலிந்து விடுபட்ட தனிமனித சுதந்திரம் வரையில் யாழ்ப்பாணம் தலை நிமிர்ந்துநிற்கிறது. இப்போது கரையுடைத்த காட்டாற்று வெள்ளம் போல் புலம் பெயர் புலி பினாமிகள் மத்தியில் கலாசாரசீரழிவு தலைவிரித்து ஆடுகின்றது. இவ்வாறு புலம்பெயர் உறவுகளுக்கு யாழிலிருந்து சனீஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் உறவுகளுக்கு யாழ்.சனீஸ்வரன் விடுத்துள்ள அன்பான வேண்டுகோள்:-

அன்பான உறவுகளே!

இன்று மானமுள்ள ஈழத் தமிழனின் ஒரேயொரு பற்றுக் கோடாயிருப்பது நீங்கள் மட்டும்தான். அப்படி இப்படி எல்லாம் கூறி உங்கள் செயற்பாடுகளால்மட்டும்தான் இன்று தாய் தமிழ் அன்னை உவகை கொண்டிருக்கின்றாள். கல்தோன்றி மண்தோன்றாக்காலத்து மூத்த தமிழுக்கென்று ஒரு நாடு வேண்டும். ஒருஅங்கீகாரம் வேண்டும் என்று போராடுபவர்கள் நீங்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் இன்று வெளி நாடுகளில் செய்யும் கலாசார சீரழிவுகளை எப்படி கூறுவது.

நாங்கள் தும்மி இருமுவதற்கும் வெம்பி அழுவதற்கும் எமக்கென்றோர்கந்தகமணமில்லா பூமி வேண்டும் என்று முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட மானமுள்ள தமிழர்களெல்லாம் மண்ணுக்குள் போய் தெய்வங்களாகிவிட்டனர். அவர்களின் ஈகத்திற்கு எல்லையே இல்லை. வெறும் வயிறு வளர்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அதைப்பற்றி எழுதக்கூட அருகதை இல்லை.

இன்று புலிப் பயங்கரவாத தலைமை பிரபாகரன் அழிக்கப்பட்ட பின் சுதந்திரமாய் ஊரில் இருந்து உணர்வுடன் இம்மடலை எழுதுகின்றேன். இன உணர்வை எழுத யாரும் இல்லாததால் இலுப்பைப்பூ நான் சக்கரையாகிவிட்டேன். இங்கேயிருக்கும் மனிதர்களில் அநேகருக்கு தாய்மொழி தாய்நாடு என்ற பற்றுடன் வழ்ந்து கெண்டு இருக்க மானமுள்ள தமிழனை வெளி நாடுகளிள் சந்திப்பது மிகவும் கஷ்டமாயிருக்கின்றது. ஒன்றில் மானத்தமிழன் எல்லாம் இறந்துவிட்டார்கள். இல்லையென்றால் ஊமையாகிவிட்டார்கள் அங்கு. இங்கு நல்லின மரங்களெல்லாம். கள்ளியும் குருவிச்சையும் நாகதாளியும் காடு மரங்கள் எல்லாம் இப்போது துளிர் விட்டு தலை நிமிர்ண்து நிற்கி்ண்றன.

இன்று புலம் பெயர் இளைஞர்கள் மனதில் காதலும் காமமும் நிரம்பி வழிகின்றதே தவிர தமிழின உணர்ச்சி செத்துவிட்டது. செல்போன், டிஸ் ரிவி, இன்ரநெற், ஆபாசப் படங்கள் என்று காமக்களியாட்டம் நடைபெறுகின்றது. பிள்ளைகளைப் பெற்று வீசிவிட்டுச் செல்லும் கன்னித்தாய்மார் அதிகரித்துவிட்டார்கள். வழியில் தெருவில் கல்லூரி செல்லும் செல்லும் மாணவர்கள் - இவர்கள் பதினெட்டு வயது கூட நிரம்பாதவர்கள் - செய்யும் கூத்துக்கள் தாங்க
முடியவில்லை. அங்கிருக்கும் தியேட்டர்களில் இப்போது பொக்ஸ் வசதி எல்லாம் ஏற்படுத்தி கலாசாரத்தை சீரழிக்கும் பங்கினை செவ்வனே செய்கிறார்கள்.

வெளி நாட்டில் தமிழர் இல்லம் தாய் இல்லம் எல்லாம் என்று நடத்தினமாம் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் ஆசிரியர் பல கலாசார சீரழிவுகளை செய்கிறாராம். தமிழர் இல்லத்தில் அந்தப் பழமைபெற்ற விரிவுரையாளருக்கு இப்போது “புலி” பற்றிய பாடங்கள் விளையாட்டுக்களை நடாத்துகிறாராம். அவரது சிஷ்ய கோடிகளும் புலிப் பினாமிகள் பலர் நாட்டில் புலிகள் அழிக்கப்பட்ட பின் முளைத்திருக்கிறார்களாம்.

விடுதலைப்புலிகளும் அவர்களது புலிப் பினாமிகளாளும் கலாச்சார கட்டுப்பாடுகளுடன் இருந்த யாழ்ப்பாணத்து தமிழன் வெளி நாடுகளில் தலை குனிந்து நிற்க்கிறான். இப்போது கரையுடைத்த காட்டாற்று வெள்ளம் போல் கலாசார சீரழிவு தலைவிரித்து ஆடுகின்றது. சீதனம், சாதீயம் பிரதேச வாதம் என்பனவும் தம்பங்குக்கு சீரழிக்கின்றன.

என்னருமைச் சகோதரங்களே! நீங்கள் அன்று வறுமையிலும் வெயிலிலும் வாடி வதங்கி பாடுபட்டு பணம் உழைத்து உங்கள் வயிற்றிற்கு கூட சேர்த்து வைக்காது அங்கே அவர்களை அனுப்பி வைக்க அவர்கள் அங்கே வேளைக்கு வேளை உண்டு கொழுத்து சந்திக்கு சந்தி நின்று குறுப் குறூப்பாபாக சண்டித்தனம், காவாலித்தனம் எல்லாம் பெருகிவிட்டன. கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

என்னியவர்களே…! என்னருமைச் சகோதரங்களே! இப்போது புலிப்பினாமிகள் அங்கே பல அப்பாவி தமிழர்களிடம் உங்களுக்கு பணம் அனுப்புவதாக கூறி பணம் அறவிடுகிறார்கள்
அப்பணம் உங்களுக்கு அனுப்புவதாக தெரியவில்லை புலிப் பினாமிகள் அங்கே தங்கள் ஆடம்பர வாழ்கை வாழ்வதுக்கு வீடு கடைகள் வாகணங்கள் மது பாண விடுதிகள் எல்லாம் வாங்கி குவித்துள்ளார்கள். நீங்கள் அன்று கஸ்ரப்பட்டு இவர்களை வெளி நாடு அனுப்பி விட. உங்கள் பணம் எம் தாய் நாட்டின் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றது.

இங்கு பல சமூக சேவை நிறுவனங்கள் எல்லாம் புலம் பெயர் தமிழர்களிடம் கையேந்தி தம் வயிறு வளர்க்கும் நிலையில் இருக்கின்றன. கோயில் கட்டுகிறோம், பாடசாலை கட்டுகிறோம் என்றெல்லாம் புலிப் பினாமிகள். ஏய்த்து எமாற்றி பிழைப்பவர்கள் பெருகிவிட்டார்கள். உழைப்பை நம்பிய காலம் மலையேறிவிட்டது.

புலம் பெயர் புலிப் பினாமிகள் கூழ் குடித்த காலம் போய் கொக்கோ கோலா கேட்கிறது. அதை குடிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. உங்கள் உழைப்பில் குடியுங்கள். எவனோ அடுத்தவர் உழைத்த பணத்தில் பீரும் விஸ்கியும் இன்னபிற குடிவகைகளையும் இவர்கள் அனுபவிக்கிறார்கள்.

சகோதரங்களே..!பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். உங்கள் உழைப்பை வீணாக்காதீர்கள். மலரவிருக்கு நம் தேசத்தில் நீங்கள் வந்து தலை நிமிர்ந்து வாழ உங்களுக்கும்
பத்திரப்படுத்துங்கள். உங்கள் சகோதரங்களில் அப்போது புலிகளின் அடக்கு முறைக்கு உள்பட்டிருந்த மக்கள் இப்போது இங்கே நின்மதியாக உழைத்து வாழ்கின்றார்கள். அவர்களையும் உழைத்து சாப்பிட வையுங்கள் நீங்கள் காசு குடுத்து அவர்களை
சோம்பேறிகளாக்காதீர்கள். தமிழீழத்தினைச் சுற்றி கடலும் நன்நிலமும் இருக்கின்றன. இவற்றை வைத்துத்தானே பண்டைத்தமிழன் தொழில் செய்து வாழ்ந்தான். வெளிநாட்டுப்பணம் எப்போது வந்தது.

வெளி நாடுகளில் தமிழர் மத்தியில் சீதனம் அங்கு தலைவிரித்து ஆடுகின்றது. உங்கள் பணத்தால் பணத்தின் அருமை பெறுமதி இங்கு குறைந்து வெளிநாட்டுத் தொடர்பில்லாத ஏழை வீட்டு குமருகள் கரைசேர முடியா நிலை இருக்கின்றது. ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள் முப்பது நாற்பது லட்சம் என்று கேட்கிறார்கள். இல்லாத ஏழைகள் என்ன செய்வது.

என்னியவர்களே நான் எழுதியவற்றிலி தவறு இருந்தால் மன்னியுங்கள். அங்கிருக்கும் எல்லாத் தமிழனும் இப்படி இல்லை. ஆனால் ஆநேகம்பேர் இப்படித்தான். இதனால் நெஞ்சு பொறுக்காமல் எழுதிவிட்டேன்.

பிரபாகரன் என்ற அரக்கன் ஆட்சியின் காலத்தில் அடக்குமுறைக்கு பயந்து வெளி நாடு தப்பி ஓடிய தமிழன் நிலைமை பார்க்குபோது மனதில் என் போன்றவர்களால் இத்தகைய சீரழிவுகளை தாங்கவும் மறக்கவும் முடியவில்லை.

புலம் பெயர் தமிழர்கள் இத்தகைய கலாசார சீரழிவுகளுக்கு உங்கள் பணம் காரணமாக அமைந்து விடக்கூடாதில்லையா..? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com