Monday, December 14, 2009

இத்தாலி பிரதமர் மூக்கு - பல் உடைப்பு

இத்தாலி பிரதமர் மூக்கு உடைந்தது , உதடு கிழிந்து 2 பல் போன நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இத்தாலியில் மிலன் நகரில் அவரது கட்சி சார்பில் நடந்த பேரணியில் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ( வயது 73 ) பேசினார். இதனையடுத்து காரில் ஏறி கிளம்ப சென்று கொண்டிருந்தார். இடையில் அவரது ஆதரவாளர்கள் பலர் ஆட்டோகிராப் வாங்கி கொண்டிருந்தனர்.

இந்நேரத்தில் கையில் ஒரு உலோக சிலையுடன் வந்த நபர் ஒருவர் பிரதமர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் பிரதமரின் உதடு கிழிந்தது. ரத்தம் கொட்டிய நிலையில் அவசர, அவசரமாக பாதுகாப்பு படையினர் அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில் பிரதமரின் மூக்கு உடைந்துள்ளது. இதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும், 2 பல் உடைந்து விட்டது. கிழிந்த உதடு தைக்கப்படும். என்றனர். சம்பவம் நடந்ததும் தப்பி ஓட முயன்ற அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்ததனர். இவரை விசாரித்ததில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. இவரது பெயர் மாசிமோ டார்டாக்டலியோ என தெரிய வந்துள்ளது .

செக்ஸ் குற்றச்சாட்டும் உண்டு : இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கோனியை பொறுத்த வரையில் 2 முறை இங்கு பிரதமராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும் அவர் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவரது எதிர்ப்பாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இந்நிலையில் பிரதமர் மூக்கு உடைக்கப்பட்டிருப்பது அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com