Sunday, December 13, 2009

அரசு அந்தரங்க ஆவணங்களை பகிரங்கப்படுத்துகின்றது: ஜெனரல் சரத் பொன்சேகா.

பௌத்த பிக்குகளுடனான ஒன்று கூடல் ஒன்றில் பேசிய ஜெனரல் சரத் பொன்சேகா, அரசு சில ஆயுத கொள்வனவு ஆவணங்களை பாராளுமன்றில் பகிரங்கப்படுத்தியுள்ளதாகவும், இது நாட்டின் நடைமுறையில் என்றுமே இருந்திராததும், ஒவ்வாததுமாகுமென
தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இராணுவத்தளபதியாக இருந்தபோது சில கொள்வனவுகளுக்கு கையொப்பமிட்டுள்ளதாகவும், சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குறைவான கொள்வனவுகளுக்கே இராணுவத் தளபதி கையொப்பம் இடமுடியும் எனவும் அதற்கு மேலான தொகைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே கையொப்பம் இடவேண்டும் எனவும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com