Thursday, December 10, 2009

கிளிநொச்சியில் இருந்து தங்கம் நிரப்பிக்கொண்டு வந்த வாகனம் பொலிஸாரால் கைது?

கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து தங்கம் கடத்திவந்த வாகனம் ஒன்று மதவாச்சி பொலிஸ் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டபோது உயர் மட்டத்தில் இருந்து வந்த உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக லங்காஈநீயூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தங்கத்தை கடத்திவந்த வாகனம் ஓர் டபிள்கப் எனவும் , மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே அவ்வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவ்விணையம் அச்செய்தி தெரிவிக்கின்றது.

மதவாச்சி பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட இணையத்தளத்தினர் குறிப்பிட்ட வாகனத்தின் இலக்கத்தை குறிப்பிட்டு, நடந்த சம்பவத்தை வினவியபோது, அவ்வாறான ஓர் விடயம் இடம்பெறவில்லை என பொலிஸார் மறுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com