சிவாஜிலிங்கமும் சிறிகாந்தாவும் ரெலோவிலிருந்து இராஜனாமா.
ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து அவ்வியக்க உறுப்பினர்களான சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் இராஜனாமா செய்து கொண்டுள்ளதாக, இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் சுயவிருப்பின் பேரில் எடுத்துக்கொண்ட முடிவிற்கு தமது அமைப்பு தமது பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூலிக்காக புலிகளுக்கு பொதி சுமந்த கழுதைகள் அவ்வியக்கம் ஒழிக்கப்பட்டவுடன் அந்தர் பல்டி அடித்து தாம் வெகுவாக விமர்சித்து வந்த அரசின் காலில் விழுந்து , சேவகம் செய்து வருவதாக பரவலான விமர்சனங்கள் நிலவிவருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment