Monday, December 7, 2009

ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் குடா நாட்டிட்கு செல்ல ஏற்பாடு

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரேம சிங்க அவர்களும் யாழ்பாணம் விஜயம் செய்யவுள்ளனர். ஜனாதிபதி எதிர்வரும் 09 திகதி யாழ்பாணம் செல்லவுள்ளதுடன் அவர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதே வேலை எதிர்கட்சித் தலைவர் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்குடாநாட்டிக்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ் விஜயத்தின்போது அவர் யாழ்பாண ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாகிகள் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரேமசிங்கவும் குடா நாட்டிட்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிதக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com