வெளியானது துவாரகாவின் படமல்ல
அண்மையில் இணையதளங்களில் வெளியான கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் புகைப்படம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகாவினுடயைதல்ல என இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை என இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரவும் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் முக அமைப்பை ஒத்த ஒரு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது போன்ற புகைப்படம் அண்மையில் இணையதளங்களில் வெளியானது. இது உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அது வேறொரு பெண் போராளியின் புகைப்படம் என தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், "வன்னியில் நடைபெற்ற போரின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை இராணுவம் கைப்பற்றவில்லை" எனக் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment