Tuesday, December 8, 2009

பொலிஸ் சோதனைச் சாவடியில் துப்பாக்கியை விட்டுவிட்டு மறைந்து நபர்.

சிலாபம் பிரதேசத்தில் பகதெனிய எனும் இடத்தில் காணப்படும் பொலிஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் கைக்கிள் ஒன்றை பொலிஸார் நிறுத்தியபோது அவ்வண்டியில் வந்தவர் தான் கொண்டுவந்த பொதி ஒன்றை அங்கு தரித்து நின்றி பஸ்ஸினுள் எறிந்து விட்டு ஓடி மறைந்துள்ளார்.

அப்பொதியை சோதனை செய்த பொலிஸார் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றையும் 90 ரவைகளையும் மீட்டுள்ளனர். சந்தேக நபர் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com