Wednesday, December 9, 2009

அரசின் உயர்மட்டக்குழு இந்தியா புறப்பட்டது.

இலங்கை அரசின் உயர் மட்டக்குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரர்களான பா.உ பசில் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோர் குழுவில் அடங்குவதாகவும் அவர்கள் இந்திய அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜசபாவில் பேசிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, இலங்கையில் முடிவில்லாமல் இருக்கும் இலங்கைத் தமிழரின் அரசியல் பிரச்சினைகளுக்கு முடிவு காணுமாறு இலங்கை அரசைக் கேட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியா செல்லும் அரசின் உயர் மட்டக்குழுவினர் இடைத்தங்கல் முகாம் மக்களின் மீழ்குடியேற்றம், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு என்பன பற்றியேபேசும் என ஜனாதிபதி காரியாலய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com