தாய்லாந்திலிருந்து வெளியேறி வசிக்கும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரவுக்கு இலங்கை அரசின் பொருளாதார ஆலோசகர் பதவி வழங்கப்பட இருப்பதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மற்றொரு முன்னாள் பிரதமரும் சினவத்ரவின் உறவினருமான சோம்சல் வோங்சவட் இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாக பாங்காக் போஸ்ட் என்கிற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டில் பிரதமர் பதவியில் இருந்து சினவத்ரவை ராணுவம் நீக்கியது. இதன் பிறகு அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு ஊழல்களில் அவருக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. சிறைத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தாய்லாந்திலிருந்து வெளியேறிய காலத்தில், இலங்கைக்கு சினவத்ர பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கம்போடியா மற்றும் இலங்கை அரசுகளின் பொருளாதார ஆலோசகராக சினவத்ர நியமிக்கப்படலாம் எனவும், இது எந்த வகையிலும் தாய்லாந்துக்கு அச்சுறுத்தலாக அமையாது எனவும் வோங்சவட் தெரிவித்திருப்பதாக பாங்காங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment