Tuesday, December 15, 2009

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். கட்டுப்பணம் செலுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தாவும் உடன் சென்றதாக தெரியவருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரை நிறுத்தாது என அறிவித்திருந்த நிலையில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோராலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரெலோ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இவ்விடயத்தில் ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான அடைக்கலநாதன், வினோதராதலிங்கம் ஆகியோருக்கும் உடன்பாடு இல்லை என கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com