Sunday, December 6, 2009

லண்டனில் கடையொன்றினுள் புகுந்த தமிழ் இளைஞர்கள் கொள்ளை.

லண்டன், விம்பிள்டன் பிரதேசத்தில் உள்ள தமிழ் கடையொன்னினுள் புகுந்த ஐவர் அடங்கிய தமிழ் இளைஞர்கள் கொண்ட குழுவொன்று கடையின் உரிமையாளரை தாறுமாறாக தாக்கிவிட்டு அங்கிருந்த பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த செவ்வாய்கிழமை (01.12.2009) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கடையுரிமையாளர், படுகாயங்களுக்குள்ளாகி நான்கு நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த காலங்களில் புலிகளுடன் கொண்டிருந்த கொடுக்கல்வாங்கல்களில் ஏற்பட்ட தகராறின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இவரது கடையில் பொருத்தப்பட்டிருந்த (Closed-circuit television (CCTV)) சிசிரிவி கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பதிவுகள் லண்டன் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அப்பதிவுகளை தமிழ் ஊடகங்களுக்கும் வழங்கி இவ்வாறான குற்றவாழிகளை கைது செய்வதற்கு மக்களின் உதவியை நாடமுடியும் என எதிர்பார்கின்றனர்.

தமிழ் சமூகத்திற்கு தொடர்ந்து தொந்தரவு செய்துவரும் இக்கும்பல்களால் பாதிக்கப்படுவோர் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயங்குவதானது குற்றவாளிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com