Monday, December 7, 2009

சிவனது உருவச் சிலைகள் திருடப்பட்டுள்ளன.

களுவெல பிரதேசத்தில் உள்ள சிவன்கோவிலில் காணப்பட்ட 17 உருவச்சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கோயிலினுள் நுழைந்த குழுவொன்று ஆலய காவலாளியை மிரட்டிவிட்டு அங்கிருந்த 150 வருடங்கள் பழமைவாய்ந்த அச்சிலைகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ணா தெரிவித்துள்ளதுடன் குறிப்பிட்ட கும்பலைக் கண்டுபிடிப்பதற்கு இரு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆலயம் புனருத்தாபனம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெறவுள்ள நிலையில் சமூகவிரோத கும்பல் ஒன்றினால் இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராமவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com