Tuesday, December 8, 2009

ஐ.தே.கட்சியில் இருந்து மேலுமொருவர் அரசுடன்.

அரசிற்கு தாவியோர் மிகவிரைவில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்திமித்திர எக்கநாயக்க அரசுடன் இணைந்து கொண்டுள்ளார். கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசிய அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த பதவிகள் அனைத்தையும் ராஜனாமா செய்வதாக அறிவித்துவிட்டு இன்று பாராளுமன்ற அமர்வுகளின்போது உத்தியோகபூர்வமாக அரச தரப்பில் உட்காந்துள்ளார்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாது பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறி அரசுடன் இணைந்து கொண்டுள்ள ஐ.தே.கட்சியை சேர்ந்தோர் எதிர்வரும் சில நாட்களில் பல உண்மைகளை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com