இடைத்தங்கல் முகாம் மக்கள் மீள் குடியேற்றப்படும் விதத்தில் எமக்கு திருப்தியில்லை. ரணில்
இந்தியா சென்றுள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக்காலை டெல்லியிருந்து சென்னை சென்றடைந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், டெல்லியில் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினேன். இலங்கையில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை அவர்களது சொந்த ஊரில் குடியமர்த்த எடுக்கும் நடவடிக்கை எங்களுக்கு திருப்தியாக இல்லை. 2010-ல் நடைபெறும் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் சுதந்திரமாகவும் ஜனநாயக முறையில் வாழவும் நடவடிக்கை எடுப்போம். இலங்கையில் நடைபெறும் தேர்தலில் முகாம்களில் உள்ள தமிழர்களும் வாக்களிக்க வேண்டும். இதற்காக நாங்கள் இலங்கை தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
0 comments :
Post a Comment