Saturday, December 12, 2009

ஐ.தே.கட்சியின் முன்னாள் முக்கிய புள்ளி ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் மிகப்பெரும் சக்தியாகவும் விளங்கிய சிறிசேன குரே மற்றும் வடமேல் மாகாணத்தின் மாகாண சபை உறுப்பினர் சுதத் சந்திரசேகர ஆகியோர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து உரையாடியுள்ளதுடன் எதிர்வரும் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதென தெரிவித்துள்ளனர்.

சிறிசேன கூரே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள அதிருப்தி குழுவில் ஒருவரான மிலிந்த மொறகொடவினால் நிறுவப்பட்டுள்ள இலங்கை தேசிய காங்கிரஸ் எனும் அமைப்பின் தலைவராவார். இக்கட்சி எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்குவதென தெரிவித்துள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com