Thursday, December 10, 2009

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன். ஜெனரல் பொன்சேகா.

இலங்கையில் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனது இவ்உறுதிமொழி தொடர்பாக பலரும் பல கோணங்களிலும் விமர்சிக்கலாம். ஆனால் நான் உறுதி மொழியை வழங்கினால் அதைக்காப்பாற்றுவேன் என்பதை கடந்தகாலங்களில் நிருபித்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தால் தான் ஒர் சாதாரண மனிதனாகவே இருப்பேன் என்பது தெரியும் எனவும் நாட்டு மக்களின் உயரிய வாழ்வை கருத்தில் கொண்டு பாராளுமன்றிற்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க உறுதிபூண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com