அர்ஜூனா ரணதுங்க ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு. அரசில் ஊழல் இடம்பெறுகின்றதாம்:
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா மற்றும் எதிர்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து உரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசினுள் இருந்து கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளேன். இன்றைய நாட்டின் தேவை கருதி நான் இத்தீர்மானத்தை எடுத்துள்ளேன். நான் இத்தீர்மானத்தை எடுப்பதற்காக கட்டாயப்படுத்தப்படவோ அன்றில் நிர்பந்திக்கப்படவோ இல்லை. நான் இத்தீர்மானத்தை எடுப்பதற்கு பிரதான காரணம் அரசில் இடம்பெறுகின்ற மோசடிகளாகும். அவற்றை தடுப்பதற்கோ எதிர் நடவடிக்கை எடுப்பதற்கோ நாம் சக்கியற்றவர்களாக காணப்படுகின்றோம். ஆனால் எனக்கு மோசடியை தடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. காரணம் அது நாட்டின் சகல மூலைகளிலும் இடம்பெறுகின்றது. விளையாட்டுத் துறையில் கூட மாபியாக்கள் உள்ளனர்.
எனவே இவற்றை தடுப்பதற்காக நான் எனது கட்சியினுள் இருந்த வண்ணம் மோசடிகளை தடுக்க கூடியவர் என நான் நம்பும் வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க திட்டமிட்டுள்ளேன். அவருது வெற்றிக்கு என்னால் பலம் சேர்க்க முடியும் எனவும் நான் நம்புகின்றேன் எனக் தெரிவித்த அவர் காலம் சரியாக வரும் போது கட்சியிலிருந்து விலகுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment