Tuesday, December 15, 2009

சரத் பொன்சேகாவின் கருத்து இலங்கைக்கு நெருக்கடியை தந்துள்ளது. ஊடக அமைச்சர்.

யுத்தம் முடிவடையும் தறுவாயில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறும், புலிகளின் உயர் மட்ட உறுப்பினர்கள் எவரும் சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அறிவுறுத்தியதாக ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் ஜெனரல் பொன்சேகா தெரிவித்த கருத்தானது இலங்கையை சிக்கலுள் தள்ளியுள்ளதென ஊடகத்துறை அமைச்சர் அனுர யாப்பா பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

சர்வதேசம் இலங்கை தொடர்பாக கொண்டிருந்த கருத்துக்களை மாற்றியமைப்பதற்கு அரசு எடுத்திருந்த சகல முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளும் இக்கருத்துக்களால் மழுங்கடிக்கப்பட்டுள்ளாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com