Thursday, December 17, 2009

ஜிஎஸ்பி+ வரிச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றித்தினால் வழங்கப்படும் ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவதில் காணப்பட்டுவந்த இழுபறி தொடர்கின்றது. கடந்த புதன் கிழமை கூடிய ஐரோப்பிய சபை இவ்வரிச் சலுகை தற்காலிகாலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இம்முடிவு இலங்கை அரசிற்கு உத்தியோக பூர்வமாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகைகளைப் பெறுகின்ற நாடுகள் மனித உரிமை விவகாரங்களில் ஒத்துழைக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு இலங்கை உட்படவில்லை என்பதே இவ் வரிச்சலுகை இடை நிறுத்தப்பட்ட காரணங்களில் ஒன்றாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com