Thursday, December 31, 2009

யாழ் செல்லும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்க வேண்டுமாம்.

யாழ் செல்லும் ஊடகவியலாளர்கள் , ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் செல்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கவேண்டும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியின் குடாநாட்டு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக செய்திகளை சேகரிக்கவிரும்பும் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியின் ஊடக பிரிவினரை தொடர்பு கொள்ளவேண்டும் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment