Saturday, December 5, 2009

யுத்தத்திற்கு பயந்து அமெரிக்காவிற்கு ஓடியவர்கள் வெற்றிக்கு உரிமை பாராட்டுகின்றனர்.

நாடு பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்தபோது யுத்தத்திற்கு பயந்து அமெரிக்காவிற்கு ஓடிச் சென்று டொலர்களை எண்ணிக் கொண்டிருந்தவர்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ள வெற்றிக்கு உரிமை கோருகின்றனர் என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜேவிபி யினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்கங்களுடனான ஒன்று கூடலில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அங்கு பேசுகையில் தொழிற் சங்கங்களை ஜனநாயகத்தின் சின்னமாக காண்பதாக தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில், தான் இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய அனைத்து உறுதி மொழிகளையும் சரிவர செயற்படுத்தியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் 6 மாத காலத்தினுள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com