ஜேவிபி உறுப்பினர்கள் மீது தாக்குதல் : நால்வர் வைத்தியசாலையில்.
பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக பெலியத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார பேரணி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஜேவிபி உறுப்பினர்கள் நால்வர் படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜேவிபி ஆதரவு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது. இத்தாக்குல் ஜனாதிபதியின் மகன் தலமையிலான தருணயாட்ட கெட்ட எனும் அமைப்பின் உப அமைப்பொன்றே மேற்கொண்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment