மலையக மக்கள் முன்னணி வார இறுதியில் தனது முடிவை அறிவிக்கும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென்ற முடிவை வார இறுதியில் மலையக மக்கள் முன்னணி அறிவிக்கும் என அக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அரசாங்கத்துடன் தமது கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதே நேரம், நாளை மறுதினம் 19ம் திகதி சனிக்கிழமை கட்சியின் அங்கத்தவர்கள் ஹற்றனில் கூடிப்பேசி இறுதி முடிவை எடுப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் எதிர்வரும் தேர்லில் தமது கட்சி பொதுவான நிலையை பேணாது எனவும் சிறுபாண்மை மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்ப்பார் என நம்புகின்ற வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment