Tuesday, December 8, 2009

முன்னாள் அதிபர் சந்திரிகாவின் மகனும் தேர்தலில் குதிக்கின்றார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக கம்பஹா மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் மகன் விமுக்தி குமாரணதுங்க குதிக்கவுள்ளதாக சிங்கள நாளேடுகள் தெரிவிக்கின்றன. லண்டனில் மிருக வைத்தியராக கடமை புரியும் அவர் தேர்தலில் குதித்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக கம்பஹா மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள பா.உ பசில் ராஜபக்ச அவர்களுக்கும் விமுக்திக்கும் பாரியபோட்டி நிலவும் எனவும் அச்செய்திகள் கூறுகின்றது.

இச்செய்தி தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், இவ்வாறானதோர் வேண்டுகோள் இதுவரை முன்னாள் அதிபரிடமிருந்து வரவில்லை எனவும் அரசியலில் எதுவும் சாத்தியம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com