Tuesday, December 8, 2009

விடுதலைப் புலிகள் நக்சலைட் தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளனர் .

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய நக்சலைட் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.விடுதலைப் புலிகளின் இரண்டு சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்து பயிற்சிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் மஹாராஸ்டிராவில் கைது செய்யப்பட்ட நக்சலைட் தலைவர் ரய்னு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கைக்குண்டு பாவனை மற்றும் நிலக்கண்ணி வெடிகளை புதைப்பது குறித்து விடுதலைப் புலிகள் பயிற்சி வழங்கியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

நக்சலைட் அமைப்பினருக்கு பிலிப்பைன்ஸ் தீவிரவாத அமைப்பும் பயிற்சி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com