Wednesday, December 16, 2009

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்தினர் மீது தாக்குதல்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளியக்க உறுப்பினர்கள் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் த.ம.வி.பு உறுப்பினர்கள் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் வாகனம் ஒன்றுக்கும் தீ மூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனிய பாரதி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமது கட்சிக்காரியாலயத்தினுள் குண்டொன்றை வீசியதாகவும் அவ்விடயத்தில் ஆத்திரமடைந்த கட்சித்தொண்டர்களும் பிரதேச மக்களும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக அறியமுடிந்துள்ளது என தெரிவித்த அவர் தமது காரியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம் இனிய பாரதி தலைமையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள நிலைமைகளை கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொள்ளும் பொருட்டும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தும் பொருட்டும் மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com