Thursday, December 31, 2009

இராணுவத் தளபதி அரசியல் எடுபிடி. சரத் பொன்சேகா.

இலங்கை இராணுவத் தளபதி இராணுவத்தினருக்கு அரசியல் செய்திகளை அனுப்புவதன் ஊடாக அரசியல் எடுபிடியாக செயல்பட்டு வருகின்றார் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அங்கு பேசிய அவர் தான் ஜனாதிபதியானால் இலங்கை அமைச்சரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கை 35 இற்குள் மட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளதுடன் அமைச்சரவைக்கான செலவினங்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களுக்கும் செலவிடப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment