Wednesday, December 2, 2009

ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு விபரத்தை கோரும் உச்ச நீதி மன்று.

ஜெனரல் சரத் பொன்சேகா தன்னுடைய பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றின் தீர்ப்பை நாடியிருந்தார். பாதுகாப்பு குறைக்கப்பட்டதன் ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்று எதிர்வரும் 11ம் திகதிக்கு முன்னர் ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான முழுவிபரத்தையும் மன்றுக்கு சமர்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆணையிட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com