Thursday, December 17, 2009

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவுற்றது. மஹிந்த, பொன்சேகா கை குலுக்கினர்.

எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேட்பு மனுவுக்கான பணம் கடந்த காலங்களில் செலுத்தப்பட்டிருந்த போதிலும் வேட்பாளர்கள் இன்று தேர்தல் திணைக்களத்திற்கு நேரில் சென்று தமது வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்தனர். ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுடன் 22 வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முன்னணி வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருடன் அரசியல் கட்சிகள் சார்பாக 18 பேரும், சுயேட்சை கட்சிகள் சார்பாக 4 பேரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் திணைக்களத்தில் சந்தித்த எதிர் வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்தவும் , ஜெனரல் சரத் பொன்சேகாவும் கைகுலுக்கு சுகம்விசாரித்து கொண்டுனர். வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவு வெற்றுள்ளது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com