Tuesday, December 15, 2009

பொன்சேகாவை பதவி நீக்குமாறு மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். பாக் பத்திரிகை

இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பொன்சேகாவை உடனடியாக பதவியிலிருந்து விலத்தி பிறிதொருவரை நியமிக்குமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டதாக பாக்கிஸ்தான் த நேசன் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்திய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இடம்பெற்றது போன்றதோர் இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படுவதற்கான சாத்திக்கூறுகள் தோன்றிவருவதாகவும், அதற்கு ஏதவாக இலங்கை இராணுவத்தினதும், ஜெனரல் பொன்சேகாவினதும் பலம் அங்கு ஓங்கியுள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் மே மாதம் 21ஃ22 ம் திகதி இரவு இலங்கை அரசின் உயர் மட்டத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக அப்பத்திரிகைக்கு நம்பகமாக தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேற்படி விடயத்தை தெரியப்படுத்தியதுடன் பாதுகாப்பு படையில் உள்ள சகல உயர்மட்டத்திலும் உடனடி மாற்றங்கள் கொண்டுவரப்பவேண்டும் என தெரிவித்தாகவும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com